பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புற்று இருக்கும்போதே வருவாய் வெகு சொற்பம். இருந்தும், பையனுக்கு வயது வந்ததும் மலையைப் பெயர்த்துவிடப் போகிறான் எனும் அபார நம்பிக்கை. அதன் ஒரே துண்டுதலில், படாத கஷ்டங்கள் எல்லாம் பட்டு, மானத் தையும் அவனையும் காப்பாற்றி வந்தாள். ஆனால் பையன் வழியே தனி வழியாய்ப் போய்விட்டது. சுவாமி பாடே. வேளா வேளைக்கு நைவேத்தியமில்லாமல், தகராறாய்ப் போய்விட்டது. பையன் சோற்று மூட்டையை மரக்கிளை யில் எங்கேயாவது தொங்க விட்டு விட்டு, சஹாக்களுடன் கூத்தடிக்கப் போய்விடுவான். வீட்டில் சாப்பாட்டுக்கு அந்த முட்டை வந்தாக வேண்டும். தெய்வம் எப்பொழுது கண் திறக்குமோ என்றுகூட இல்லை-டையனுக்கு வீட்டுப் பக்கம் எப்பொழுது மனந்திரும்புமோ என்று அம்மா, கண்ணில் உயிரை வைத்துக்கொண்டு, காத்துக் கிடப்பாள். அப்படியே அவன் இஷ்டப்பட்ட சமயத்தில் வீட்டுக்கு வந்தவனையும், கனிவாகவோ கண்டனமாகவோ ஒரு வார்த்தை கேட்டுவிட முடியுமா? அவன் சீறி விழுகை யிலேயே நாடி ஒடுங்கிவிடும். சுவாமி தோன் கண்ணைத் திறக்க ைேண்டும்-குழந்தையைக் கொடுத்தே-கூட அவனுக்குக் குணத்தைக் கொடு-' மிடிவாயும், பிள்ளைக் கவலையும் பட்டுப் பட்டு, அவளுக்கு வயதுக்குமீறிய கிழம் விழுந்து விட்டது. இதைத் தவிர ஆசாரம், சீலம் எல்லாம் அதிகம். தானாய் நேரும் பட்டினிகள் தவிர, நாள் கிழமை யென்று உபவாசம் இருப்பாள்-எல்லாம் பிள்ளைக்காக. பிள்ளைக்கு நல்ல புத்தி வரணும். பிள்ளைக்கு கல்யாணம் ஆகணும். பிள்ளை குலம் வளரணும்.'- ஆனால் அவள் சாமியை வேரோடு பிடுங்கப் பிடுங்க, அது அவள் விஷயத்தில் கடுமையாய்த்தானிருந்து. தரித்திரம்தான் பிடுங்கி யெடுத்தது. அப்பளமிட்டு, இலை, தைத்து. விற்கும்