பக்கம்:புலவராற்றுப்படை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ - பிரிநிலை. பயில்வுழி - வகரம் தோன்றல் விகாரம்.

நன்று உறு தமிழ் வளம் குன்றுதல் கண்டு - நன்மை பொருந்திய தமிழின் வளம் குன்றுதலைக் கண்டு,

அது பண்டை இல் சிறந்து தழைப்ப கொண்டு - அத்தமிழ் பண்டு போலச் சிறந்து தழைத்தற்காக மனங் கொண்டு,

பண்டை யென்றது சங்கத்தார் காலத்தை,

வான் அமர் அதனை யான் வளர்ப்பல் என - சிறப்புத் தங்குமத்தமிழை யான் வளர்ப்பேனென்று சொல்லி,

அஞ்சிறை தும்பி துஞ்சி ஊத - அகத்தின்கட் சிறகினே யுடைய வண்டுகள் தங்கியூதலால், - பிணி அவிழ்பு அலர்ந்து காம்பு கழல்அணி மலர் - முறுக்

கவிழ்ந்து விரிந்து சினையினின்று காம்பு கழன்ற அழகிய பூக்கள்,

வன்னம் கம்பலம் விரித்து ஆங்கு அன்ன தரை படர்ந்து இமைக்கும் விரைகெழு பூபொழில் - சித்திரகம்பலத்தை விரித் தாற்போலத் தரையிற் படர்ந்து விளங்கும் வாசனைமிக்க அழகிய சோலைகள்,

இரு மருங்கு ஒழுகிய - இரண்டு பக்கத்து மொழுங்குபட வளர்ந்து, உம்மை தொக்கது.

கரை பொரு வையை செந்தமிழ் நாடு திரு தகு முது ஊர் - கரையைப் பொருதுகின்ற வையையாற்றினையுடைய பாண்டிநாட் டின் கண்ணுள்ள செல்வந் தக்கிருக்கும் பழையவூர்,

'சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ் - சவுந்தர

பாண்டிய னெனுந் தமிழ் நாடனுஞ் சங்கப் புலவருத் தழைத்தினி

திருக்கு, மங்கலப் பாண்டி வளநா டென்ப' என்பவாகலின், செந்தமிழ் நாட்டைப் பாண்டி நாடென்ரும்.

பைந்தமிழ் வளர்த்த ೬T65TH-LIಗೆ இருக்கை - பசிய தமிழை முற்காலத்து வளரச்செய்த பாண்டியர்களின் குடியிருப்பு,

நடை மாண் புரவி உம் - நடையான் மாட்சிமைப்பட்ட

குதிரைகளும்,

மான் தொடை தேர் உம் - குதிரை தொடுத்தலையுடைய தேர்களும்,

24

24