14
புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
ஓரமா? ஈடு வழியா? பெரிய சாலையின் மத்தியில், பலர் பேசிக் கொாடே சென்றனர். அவர்களில் இரண்டு புலவர் களும் சென்று கொண்டிருந்தனர். ஓரமாகப் போவது நல்லது; நடுவழியில் செல்வது ஆபத் தானது; ஓரமாகப் போகுமாறு, காவலர்கள் எச்சரிக் கிறார்கள், அவர்கள் பேச்சை மீறினால், தண்ட னைக்கு ஆளாக நேரிடும் என்றார் புலவர் ஒருவர்,
"நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஓரம் போகக்கூடாது; எப்பொழுதும் நடுவழியில் தான் செல்ல வேண்டும். அதுவே நீதி முறை என்றார் மற்றொரு புலவர்.
' நீங்கள் கூறுவது, நீதி முறைக்குப் பொருந் தும்; சாலை விதிமுறைகளுக்குப் பொருந்தாது என்றார் புலவர்.
{+'ஓரம் -விளிம்பு, ஒருதலைச் சார்பானது என்று பொருள்) ---
கூடிப் படித்தவரா? கூடப் படித்தவரா? சைவ மடத்தின் தலைவரும் ஒரு புலவரும் அளவனாவிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே வேறு சிலரும் வந்திருந்தனர் . அவர்களிடம், இந்தப் புலவர் கல்வி அறிவில் திறமையாளர்; இவர் நம்முடன் கூடப் படித்தவர்' என்று கூறினார் மடத்தின் தலைவர்,