பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

முல்லை பிஎல். முத்தையா 33.

வீட்டுக்காரர், மனைவியை அழைத்து, உணவுப் பொருள்களைப் பரிமாறச் சொன்னார். எல்லா வற்றையும் படைத்து, "உண்ணுங்கள்’ என்றார் வீட்டுக்காரரின் மனைவி.

அந்த அம்மாளைப் பார்த்த புலவர், 'வெற்றி லையாக இருக்கிறதே' என்றார்.

"இதோ எல்லாம் படைக்கப்பட்டிருக்கிறதே!” என்றார் வீட்டுக்காரர்.

'உங்கள் மனைவியின் வாயைப் பாருங்கள்’’ என்றார் புலவர். -

மனைவி வெற்றிலை போட்ட வாயைக் கழுவா மல் நிற்பதைக் கண்டார் அவர்.

புலவர், இரண்டு தடவை வெற்றிலை என்று. கூறியதன் கருத்தை உணர்ந்தார் வீட்டுக்காரர்.

3 * கோடி வீட்டுக்கு அழைத்தார்

தமக்குத் தெரிந்தவர்கள் பலர் இருந்த ஊருக்கு புலவர் ஒருவர் சென்றார். - -

அங்கிருந்த பலரும் தத்தம் இல்லங்களுக்குப் புலவரை அழைத்து விருந்து அளித்து மகிழ்ந்தனர்.

பிறகு, அந்த ஊர்க்காரர் தம் வீட்டுக்கு விருந்: துக்கு அழைத்தார்.

அவரிடம் உங்கள் வீடு எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டார் புலவர்.