பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

முல்லை பிஎல். மூத்தையா 香薰

S● இனியவரை துணைகொள் உயர்நிலைப் பள்ளியில் இருவர் படித்து வந்த னர், ஒருவன் பெயர் இளவழகன்; மற்றொருவன் பெயர் நிலவழகன். இருவரும் இணைபிரியாத் நண்பர்களாக இருந்தனர். நல்ல குணம் உள்ள வர்கள். -

அவர்களுடைய தோழமையைக் கண்ட ஆசிரி யர்களும் மாணவர்களும் வியப்படைந்தனர். வேறு மாணவர்களுக்குப் பொறாமையும் உண்டாயிற்று. திடீரென்று நிலவழகனுக்குக் காய்ச்சல் உண்டாகி பது, அடுத்த மூன்று நாட்களில் நிலவழ களின் உயிர் பிரிந்து விட்டது.

பள்ளியே வருத்தத்தில் ஆழ்ந்தது. நிலவழகனின் பிரிவு இளவழகனை மிகவும் வாட்டியது. அவனுடைய வருத்தத்திற்கு அளவே இல்லை. இனி யாரை துணை கொள்வேன்’ என்று சொல்லிச் சொல்லி ஏக்கமுற்றான்.

அவனுடைய நல்ல குணத்தை அறிந்த பள்ளி வின் தமிழ்ப் புலவர், இளவழகா இனி யாரைத் துணைக் கொள்வேன் என்று கூறாமல், இனியாரை துணைக் கொள்வாயாக! அவ்வாறு இனியாரை - இனியவரை துணையாகக் கொள்க. அதனால், நீ. நன்மைகள் பல பெற்று வாழலாம்’ என்றார்.

(இனி யாரை - இனியாரை" என்று பொருள். ‘இனியார்’ என்ற சொல்லுக்கு இனிய குணம் உள்ளவர் என்ற பொருள்) - ... :