பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

荡蛋 புலவர்கள் உதிர்த்தமுத்துக்கள்

‘அங்கே என்ன அறுத்துக் கட்டுகிறதோ?” என்பது, அங்கே கதிர்களை அறுத்துக் கட்டுகி நீரோ என்பது ஒரு பொருள். அறுத்துக் கட்டுவது அங்கே தாசிகள் இனத்தில் உண்டா? (விவாகரத்து). என்பது மற்றொரு பொருள்.

Ε

பெருக்க வந்தவள்

தம் நண்பர் ஒருவரைக் காண்பதற்காக வெளி யூருக்குச் சென்றார் புலவர் ஒருவர். அந்த நண்ப ரும்கூட ஒரு புலவரே! . Y

இரவு உணவு முடிந்தது. தாம் வெளியே

திண்ணையில் ப டு த் து க் கொள்ளுகிறேன்.

அதிகாலையில் சுருக்க எழுந்து புறப்படுவதற்கு - ஏற்றதாகும்’ என்றார் புலவர். -

"நீங்கள் வெளியிலே படுத்தால் சுருக்க எழுந்து விடத் தோதாகும் இல்லாவிடில், வேலைக்காரி பெருக்க வந்து விடுவாள்' என்றார் வீட்டுக்காரர்.

மறுநாள் காலையில், வேலைக்காரி பெருக்க வந்தவள், பெருத்த உடல் உடையவளாகக் காணப் பட்டாள், வீட்டுக்காரர் கூறியது உண்மையே என்று தெரிந்தது புலவருக்கு.

(பெருக்க'- வீட்டைக் கூட்டுவதற்கு, பெருத்த உடல் உடையவள்,)