7. இ ரா ம ன் 5373 தை விரைந்து ைேய அடுத்து கின்று சீக் கடவுளை கினைந்து சில உரைகள் கூறினள். அயலே வருவன அறிக. மறைவழி கடந்தேம்ஆகில் வரும்விருந்து இகழ்ந்தேம்ஆகில் முறைவழி செய்யேம்ஆகில் மூப்பரை முனிந்தேம்ஆகில் பிறர்மனே நயந்தேம்ஆகில் பிறர்மனம் வைத்தேம்ஆகில் குறைசில செய்தேம்ஆகில் கொல் எனக் கனலில் பாய்ந்தாள். மதுரமென் மொழியாள் கற்பு வளர்நெடு வடவைத் தியின் முதிர்தழல் அதுதான் என்னேச் சுடும்என முழங்கு செந்தி அதிர்குரல் ஆர்ப்பு மாறி அடங்கிகா ஒடுங்கிக் காலேக் கதிரவன் வரவு கண்ட இருள் எனக் கழிந்த தன்றே. (2) மண்டழல் தணிந்து மூங்கில் வனம்எலாம் வாவி ஆகி முண்டகம் குமுதம் நீலம் முளரிகள் கிறையப் பூப்பக் கண்டகம் குளிர்ந்து கற்பிற்கு அரசியைப் புகழ்ந்து போற்றி வண்டலின் மணிகொழிக்கும் வாரண வாசி சேர்ந்தார். (3) (அரிச்சந்திர புராணம்), சந்திரமதி கெருப்பில் பாய்ந்ததும், அது குளிர்க்க நின்ற தம், கற்புத் தீ வடவைக் யிேனும் வலியுடையது எனத் தீக் கடவுள் மொழிந்ததும், அளிபுரிக்க மறைந்ததும், இக்குல மகளே வியந்து உலகம் புகழ்ந்ததும் இங்கே காண வந்துள்ளன. இராமனுக்குப் பல கலேமுறைகளுக்கு முக்தி அந்தக் குடி யில் இருந்த பெண்ண சி இன்னவாறு பெருமகிமை அடைக் துள்ளாள். குல மரபின் விழுமிய நிலை விழி தெரிய வந்தது, இத்தகைய பத்தினிகள் எவரினும் உத்தம கிலையில் உயர்க் துள்ள சீதை நெருப்பில் பாயவே தீயின் அதிதேவதையான அக்கினி பகவான் சிவந்த சோதியனப் உருவம் தாங்கி இக் கம்பரசியை இருகைகளிலும் எக்தி வெருவரலோடு அற்புத கிலையில் நேரே கொண்டு வந்தான். தாமரைப் பொய்கையி லிருந்த மாமறை முதல்வன் ஒரு காமர் உருவினை கேமமாப் பேணி வருதல் போல் இராமன் எதிரே விரைந்து வந்தான். அழுக்கினள் கங்கைமற்று அங்கையால் சுமந்து எழுந்தனன் அங்கிவெந்து எரியும் மேனியான் தொழுங்கரத் துனேயினன் சுருதி ஞானத்தின் கொழுங்கினேப் பூசல் இட்டு அரற்றும் கொள்கையான். (1)
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/263
Appearance