பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5426 கம்பன் கலை நிலை விளங்கி விரைந்து பறந்து மேலே சிறந்த வருவதைக் கண்டு ஊரும் உலகமும் உவந்து வந்தன. ஊர்தியும் அரிய பல சீர்க ளோடு எழில் மிகுந்து ஆகாய விதியை அலங்கரித்து வந்தது. இலங்கையை வலம் செய்து ஏக. விமானம் இன்னவாறு செல்ல வேண்டும் என்று இராமன் எண்ணி இருப்பதை இது ம் க ண் எதிரே காட்டியுள்ளது. தான் வெற்றி பெற்ற வித்தக நகரை வலம் செய்து போகவேண் டும் என்று இவ்வுத்தம விரன் விரும்பியது வீர கம்பீரமாய் விரிக் து மிளிர் கின்றது பகை அடங்க வென்றபின் அந்த இராசதானி பும் தேசமும் ட்ரிமையா அமைந்தன ஆயினும் விசய வென்றி களோடு பெருமித நிலையில் இக்கொற்றக் குரிசில் கோமுறை புரிந்து வெற்றி வி. விளங்க விமானம் ஏறி வந்துள்ளான். தேவரும் தொழுது வணங்க, யாவரும் எவல் புரிய, மூவுல கங்களையும் ஆண்டு வந்தவன் நீண்டு வாழ்ந்து வந்த நகரை நே ரே விமானம் வலம் செய்து எழுந்த போது போர் கடந்த கிலே களையும் நேர் விழுந்த கொலைகளையும் நிலைமை தலைமைகளையும் தனது குலத்தேவியிடம் இக்குலமகன் நலமாப் க் கூறிவந்தான். வெற்றிப் பாடான விர மொழிகள் வியப்புகளை விளேத்து வந்தன. தேவராசன் ஆன இந்திரனேயும் வென்று அதிசய விரன் என்று யாண்டும் இசை பெற்று கின்ற இந்திர சித்தை நம்இள வல் வென்ற இடம் அதுதான்; இக்க இடத்திலே கான் இராவ ணன் மாண்டு விழுந்தான், கும்ப கருணன் அதிகாயன் முதலிய பெரிய போர் வீரர்கள் இ ற ங் து வீழ்ந்த இடங்கள் அதோ அவையே” என இவ்வாறு இராமன் சீதையிடம் கூறிவரும் போதே விமானம் எல்லை கடந்து எழுபது மைல் தாரம் ஒல்லை யில் பறந்து வடதிசை நோக்கிக் கடல் மேல் வந்து கொண்டி ருந்தது. வரவே அலைகடல் இடையே கிலேயாப் நீண்டு கெடிது கிடந்த பெரிய கல் அணையைச் சானகி கண்டாள்; காணவே வேணவாவுடன் வியந்து நோக்கிள்ை; ஆழ்க்க ஆழி நடுவே இந்த அணை எவ்வாறு நேர்ந்தது? என்று கூர்ந்து பார்க்கத் தேவி அதிசயம் அடைவதைக் கண்டு இவ்விரன் ஆனந்தம் அடைக் தான். அது சேர்ந்த வகைகளை எல்லாம் தொகையா ச் சொல்ல நேர்ந்தான். சொல்லில் உள்ளத்தின் உவகைகள் துள்ளி வந்தன.