உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5448 கம்பன் கலை நிலை மனித மரபில் மன்னர் பெரியவர்; உலகம் அவர் ஆணைவழி யே ஒழுகி வருகிறது; அத்தகைய விழுமிய வேக் கரும் தத்தவ ஞானிகளுடைய அடிகளில் முடிபடிய விழுந்து தொழுகின்றனர். விசுவாமித்திர முனிவரை க் கண்டதும் கசரதச் சக்கரவர்த்தி அரியணையிலிருந்த விரைந்த எழுந்து அவரைக் கொழுத வணங் கிப் பயபக்தியோடு துதித்த கின் ருர், அந்த மாதவரை நோக்கி மன்னர் பிரான் கூறிய புகழ் மொழிகள் இராமகாவியத்தின் முதலில் விேய ஒளிகளை விசித் திவ்விய நிலைகளை விளக்கி புள் ளன. பாசம்ங்ேகிய ஞானி ஈசன் போல் கேசு ஓங்கி நிற்கிருன் ஞானமும் தவமும் தெய்வ நீர்மைகள்; அவை கோப்க்க அளவு வேன் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கிறது. எவ்வழியும் செவ்விய மேன்மைகளை எ ப்திப் பரஞ்சோதி போல் பெருஞ் சோதியை விசி விளங்குகிறது. ஒகாமலே யாவும் உணர்க்க கொள்ளுகிறது. அதிசய அறிவு துதிகொண்டு திகழ்கின்றது. பல காலமும் பயின்று முயன்ற மேதைகளும் அறிய முடி யாத அரிய மதிநலங்கள் மெய்ஞ் ஞானிகளுக்கு எளிதே தெரிய வருகின்றன. நூலறிவு காணுக மேலறிவு வாலறிவாகிறது கற்ருேர் அறியா அறிவினர்; கற்ருேர்க்குத் --=== தாம்வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவர். (திருமுருகு) ஞான முனிவர்களுடைய நீர்மை சீர்மை நிலைமை தலைமை களைக் குறித்தக் கல்வி வீரராகிய நக்கீரர் இவ்வாறு கூறியிருக்கி ருர், உரைகளில் மருவியுள்ள பொருள்களை ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும். உள்ள ம் கெளிய உணர்வு ஒளிவீசுகின்றது. அறிவு, உணர்வு, யூகம், விவேகம், முதலியன யாவும் ஞான ஒளியின் கிரணங்களாப் வெளியே இனித மிளிர்கின்றன. I wisdom dwell with prudence, and find out knowledge of witty inventions. [Bible.] ஞானம் ஆகிய நான் விவேகத்துடன் வாழுகிறேன்; அரிய ன் இராம, பால, கையடை,4, 5, 6 பார்க்கவும்.