பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர் நிலையத்தையே தலைமை நிலையமாகக் கொண்டு விட்டனர். இருப்பினும், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம், திருக்கோவலூர் ஆதீனம்’ என்றே இன்றும் சிறப் பாக அழைக்கப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூரில் அருளாட்சி புரிந்து வந்த நான்காம் பட்டத்து அடிகளார்க்கு, திருநாகேசுரத்தில் பிறந்த பழநியின் குடும்பத்தினர் உறவுமுறை உடைய வர்கள். எனவே, அடிகளார், பழநியின் தந்தையைக் குடும்பத்துடன் பாதிரிப்புலியூருக்கு வந்து அருள் நெறி யகத்தின் செயலாளர் பொறுப்பை ஏற்கும்படி பணித் தார்கள். அவ்வாறே அவரும் ஆறு திங்களும் நிரம்பாத பச்சிளங் குழந்தை பழநியுடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து பாதிரிப்புலியூரில் குடியேறினர். பட்டம் சூடுதல் குழந்தை பழநி வளர்பிறையென வளர்ந்து வந்தது. தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறுவர் பழநிக்குக் கற்பிக்கப்பட்டன. 1889-ஆம் ஆண் டில் இளைஞர் பழநி பிரீ-மெட்ரிகுலேழ்சன் (Pre-Matriculation) வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது நான்காம் பட்டத்து அடிகள், தமக்கு உடல்நிலை மாறு பாடுற்று இறுதிநிலை அணுகிக்கொண்டிருப்பதை உணர்ந் தார்; பள்ளிப் படிப்பை நிறுத்திப் பழநிக்கு, விரோதி ஆண்டு ஐப்பசித்திங்கள் மூன்ரும் நாள் (20-11-1889) துறவு (சந்நியாசம்) ஈந்தார்; ஞானியார் மடத்தின் அருள் தலைவராகப் ப ட் ட ம் சூட்டினர்; ‘சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் பட்டப் பெயரும் அருளினர். நான்காம் பட்டத்து அடிகளார் இறையடியெய்த, பழநி தமது பதினேழாவது வ ய தி ல் ஐந்தாம் பட்டத்து அடிகளாராகப் பதவியேற்ருர். '