பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗东 மிக்கிருந்தது. அரிய சொற்பொழிவாயினும் கால நீட்டிப் பில் கேட்பவர் சோர்வடைதல் இயல்பு. இ வ் வி ய ல் பு அடிகளுடைய சொற்பொழிவைக் கேட்பவர்கள் பால் காண்டல் அரிதாகும். சமய நிலையில் அடிகள் வீர சைவரா யினும் சித்தாந்த சைவம் முதலியவற்றில் கேட்பவர் மனம் பதியும் வண்ணம் பேசுதலில் மிகவும் சதுரப்பாடுடைய வர்கள். கடவுள் பக்தியும் சிறப்பாக முருகப் பெருமானிடத்துப் பேரன்பும் உடையவர்கள். கல்வியறிவுடையோரை நன்கு மதித்து அளவளாவும் இனிய குணம் உடையவர்கள். தமிழ் மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப்பற்றையும் தமிழ் மக்களுக்கு விளேத்து வந்த இவர்தம் அரிய சொற் பொழிவுகள், இத் தமிழ் நாட்டில் நிகழாத இடம் இல்லே யென்றே சொல்லலாம். மடாதிபதிகள் செய்ய வேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு. ஞானியாரிடத்து ந ன் கு காணப்பட்டன. இக் காலத்துள்ள மற்றைய ம ட தி பதிகள் இவர்கள் முறையைப் பின்பற்றுவார்களாயின், தமிழ் உலகிற்கே சிறந்த பயன் விளையும். இ வ. ர் க ள் ஒழுகிய நெறி ஏனேயோருக்குச் சிறந்த வழி காட்டியாக உள்ள தென்று கூறலாம். இவர்களிடத்துக் கல்வி பயின்ற மாணவர் பல ரு ம். சொற்பொழிவு கேட்ட அன்பர்கள் பலரும், இவர்கள் பாற் கொண்டுள்ள பேரன்பு அளவிடுந் தரத்ததன்று. அதற்குக் காரணம் இவர்களுடைய அருட்குண நி லே .ே ய யாகும். இவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாததொன் றென்றே கூறலாம். இத்தகைய பெரியார் ஒருவரை இனிக் காண்டல் எஞ்ஞான்று கூடுங் கொல்! திருவருள் துணை செய்தல் வேண்டும் ............