பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புல்லின் இதழ்கள்

உண்மையைச் சொல்லித்தானே ஆகவேண்டும்? தோ நிற்கிறானே ; இவன்தான் இப்போது என்னிடம் கடைசி யாக வந்துள்ள சிஷ்யன். அப்படியும் இப்படியுமாகப் பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ எனக்குத் தெரிந் ததையெல்லாம் சொல்லி வைத்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் மேருகேற்றி உருப்படியாக இவனை வெளி யேற்றி விட்டாலே எனக்கு முழுப்பாரமும் தலையிலிருந்து இறங்கியதுபோல. அதற்குள் இன்னொரு மூட்டையையும் தூக்கி வைத்துக்கொள்ளச் சொல்கிறீர்களே, நியாயமா? நீங்களே சொல்லுங்கள்’ என்று கங்காபாயைப் பார்த்துக் கேட்டார்.

ஆனால் கங்காபாய் வாயே திறக்கவில்லை. காந்தா மனியின் முகத்தில் ஏமாற்றம் ஏகபோகமாக ஆட்சி செய்தது. அவள் குனிந்த தலை நிமிரவேயில்லை.

என்ன, ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீர்களே! என்னடா இப்படி முகத்தில் அடித்தது போல் மறுத்து விட்டேனே என்று கோபமாக இருக்கிறதா?’ பாகவதர் கேட்டார்.

உடனே அந்த அம்மாள், முகத்தில் பலவந்தமாகப் புன்னகையை வரவழைத்துக் கொண்டவாறு, கோபமா? அதுவும் உங்களிடமா? ஆனால் நாங்கள் வரும்போது வழி யெல்லாம் எவ்வளவோ எண்ணிக்கொண்டேவந்தோம். நீங்கள் எங்கள் திட்டங்களையெல்லாம் ஒரேயடியாகத் தகர்த்துவிட்டீர்கள். இது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி தான். ஆனாலும் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தடை இல்லையென்றால் சொல்கிறேன். உங்களுடைய இந்தச் சிஷ்யரைக் கொண்டே சொல்லிக் கொடுக்கச் செய்து: நீங்கள் மேற்பார்வை பார்த்தால்கூடப் போதும். பிறகு உங்கள் இஷ்டம்’ என்று கூறினாள்.