பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் ஆசை 213

பக்கிரி மட்டும், அடிக்கடி இந்த ஊரிலே ஒரு டுரிங் டாக்கீஸ் போட்டா எப்படி இருக்கும்?’ என்று தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களைப் பார்த்துக் கம்பீரமாகக் கேட்பான்.

- பிரமாதமா இருக்கும் அண்ணே!’ என்று குரல் வரும்.

நல்லா வசூல் ஆகும் அண்ணே. என்ன படம் கொண்டாறப் போlங்க?’ என்று இன்னொரு கேள்வி பிறக்கும்.

இப்படியே அனைவரும் அவனது எண்ணத்தை ஆதரிப்பார்கள். ஆனால் இப்படி டுரிங் டாகீளைப் பற்றிய பேச்சிலேயே பருவம் மாறி, மழைக்காலம் வந்து விடும். வருண பகவான் மீது பழியைப் போட்டு விட்டுப் பக்கிரி சினிமாக் கொட்டகையை இழுத்து மூடி விடுவான்.

வேறு ஏதாவது புது வியாபரத்தைப் பற்றி ஆலோசனை நடக்கும். இத்தனை சாமர்த்தியமும் அவன் சிங்கப்பூரிலேயே கற்றுக் கொண்டதல்ல. இந்தியாவிலும் அவன் சுற்றாத ஊர் இல்லை. சென்னையும், பம்பாயும் அவனுக்கு நல்ல அத்துப்படி. கல்கத்தா, சிங்கப்பூரிலிருந்து காற்று வாங்கப் போகிற இடம் மாதிரி.

அடிக்கடி வியாபார விஷயமாக இங்கே எவ்லாம் வருவேன். உடனே போய் விடுன்ே’ என்று அவனே கூறுவான். அது என்ன வியாபாரம், அப்படி என்ன அவசரம் என்று மாத்திரம் சொல்ல மாட்டான்.

ஒரு சமயம் நாகப்பட்டினத்தில் பக்கிரியைப் பார்த் ததாகப் பெரியசாமியின் சிநேகிதன் ஒருவன் வந்து சொன்னான். ஆனால், இது வரை வந்தவன் அரசூருக்கு வந்து என்னைப் பார்க்காமல் போயிட்டானே பாவி!’ என்று முனியம்மள்ே வெகுநாள் வரை முனகிக் கொண்டே இருந்தாள். இப்போது அவளுடைய ஆசையைத்