பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் அசைகள் 215,

கொண்டா இப்படி’ என்றவாறு பக்கிரி உள்ளே நுழைந்தான்.

‘நல்லாக் குடி, வேளாவேளைக்குக் கிளப்பிலே நீ மட்டும் தின்னுபட்டு ஊரைச் சுத்த வேண்டியது: எப்ப னாச்சும் நெனச்சா வந்து குதிக்கிறே: அக்காங்கறே தங்கச்சிங்கறே. கையிலே ஏதோ பெரிசாப் பணம் வெச் விருக்கேன்னு பயமுறுத்தறே: கண்ணிலேயும் காம்பிக்க மாட்டேங்கறே. எங்கனாச்சும் ஒழுங்கா ஒரு இடத்திலே, கையிலே இருக்கிற பணத்துக்குக் கடை கண்ணி வச்சிருந் தாலும் யாருணாச்சும் வந்து பொண்ணு தருவாங்க, நமக்கும் மருவாதை இருக்கும். இப்படியெ போய்க்கிட் டிருந்தா என்னதான் முடிவு? ஆமா, நான் தான் கேக் கிறேன். இந்த வீட்டுக்குள்ளாற நீ அடி எடுத்து வச்சு எத்தனை நாளாச்சு? எங்கே போயிருந்தே? கண்ணப்பன் உன்னைப் பாக்கணும்னு எம்மா நாழியாக் காத்துகிட்டு இருக்குது தெரியுமா?’ என்று முனியம்மாள் ஆவேசத் தோடு கூறியபோது பக்கிரி ஆங்’ என்று ஒரு முறை சூள் கொட்டினான்.

‘அவன் ஏன் என்னைத் தேடிவரப் போறன்? நீ சொன்னாலும் நான் நம்ப வேண்டாமா? பெரிய கலெக் டரே அல்ல வந்து ஐயாவுக்கு மாலை போட்டிருக்காரு! அதுவும் ரோஜாப் பூமாலை மாத்திரமா? தங்கச் சங்கிலி, கையிலே காப்பு! என்கூட எல்லாம் பேசுவானா'’ என்று கூறியே படியே கையிலிருந்து காபியை ரசித்துக் குடித் தான். இரு இரு. உன்னையும் போலிஸ்காரன் கொண்டு போய்த் தங்கக் காப்புப் போடத்தான் போகிறான்’ என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்ட ஹரி, பக்கிரி தன் கச்சேரிக்கு வந்திருந்ததை ஊர்ஜிதம் செய்துகொண்டு தன் சித்தி பக்கம் திரும்பினான்.

‘சித்தி, இப்படி நான் சொல்லுகிறனே என்று என்னைக் கோபித்துக் கொள்ளாதே. மாமாவுக்கு வியா