பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் அசை 217

போலீசுக்கு மாமாவைப் பற்றிய தகவல் போயிருக்கிறது. ங்ெகப்பூர் பக்கிரியிடந்தான் நகை இருப்பதாகவும், எல்லாரும் ஒரே கும்பல் என்றும் அவனே கூறிவிட்டான். அது உண்மையோ பொய்யோ, இன்னும் சிறிது நேரத்தில் போலீஸ் நம் வீட்டைத் தேடி வந்துவிடும். அதனால்தான் இந்த விஷயம் என் காதில் பட்டதும், அப்படி ஏதாவது தவறுதலாக நடந்திருந்தாலும்; மீளுவதற்கு உண்டான வழியைப் பார்க்கலாம் என்று இத்தனை அவசரமாக இங்கு ஓடிவந்தேன்’ என்று ஹரி கூறி முடிப்பதற்குள் முனியம்மான் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

அக்காள் அழுவதைப் பார்த்ததும் பக்கிரிக்கும் மனசு தாங்கவில்லை. வெளியில் பார்ப்பதற்குப் பக்கிரி எப்படித் தோன்றினாலும் உள்ளுக்குள் வெறும் கோழை. அதுவும் தன் அக்காளிடம் அவனுக்கு அளவுக்கு மீறய பாசம். ஆகவே எதற்கும் கலங்காத பக்கிரி அக்காவின் கண்ணிரைப் பார்த்ததும் கலங்கிவிட்டான்.

  • தம்பி, உண்மையாச் சொல்லு: இந்தத் திருட்டிலே உனக்குச் சம்பந்தம் உண்டா? கண்ணப்பன் சொல்ற தெல்லாம் நெசந்தானா?’ என்று முனியம்மாள் பெரிசாகக் குரல் கொடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

பு. இ.-14