பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக் குறுதி 223

அழகா இருக்கு. கழுத்திலே வைர நெக்லெஸ் டால் அடிக்குது. கச்சேரி முடிஞ்சு கூட்டம் எழுந்திருச்சதும், கழுத்திலே விரலாலே லேசா ஒரு சுண்டுச் சுண்டினாப் போதும் அண்ணே ஐயாயிரமோ பத்தாயிரமோ! அப்புறம், ஆறு மாசத்துக்கு இந்தப் பொளப்பை எல்லாம் மறந்திற லாம் னு சொல்லி வந்து உசிரை வாங்கினாங்க. நானும் நெசந்தான்னு நம்பிட்டேன். அறுத்துகிட்டு வந்ததுக்கப் புறம் வாங்கிப் பார்த்தா இமிடேஷன் கல்லு. அதுக் குள்ளாற, எட்டத்திலே எங்கியோ வந்த போலீசைப் பாத்துட்டு அரண்டு போய் ஓடி, அநாவசியமா மாட்டிக் ட்ெடான்.’

இந்த ராமாயணத்தையெல்லாம் உன்னிடம் யாரு கேட்டது மாமா? இப்போ நகை எங்கே? அதை எடு’ என்றான் ஹரி.

என் கையிலே இருந்தா, நான் இதுக்கு முன்னே கொத்திருக்க மாட்டேனா? அது இப்போ வேறொரு பார்ட்டிகிட்டே இருக்கு. நீ எதுக்கும் எனக்காக ஒரு காரியம் செய்யணும். செய்யரியா?” என்று கேட்டான்.

  • கேட்காமலிருக்கவா நான் இத்தனை தூரம் வந்து: உன்னோடு இத்தனை அவஸ்தைப்படுகிறேன். விஷயத்தை முடித்துச் சீக்கிரம் என்னை விடு’ என்றான் ஹரி.

தம்பி, நான் இப்பவே போய் அந்த ஆளைப் பார்த்து நகையை வாங்கிக் கொண்டு சாயங்காலமா உங்க விட்டுக் கொல்லைப்புறம் வந்து நிக்கிறேன், நீ என்னைச் சந்தித்து நெக்லெஸை வாங்கிக் கொண்டு விடு. ஆனால் அதுக்கு முன்னே நீ எனக்கு ஒர் உதவி செய்யணும். போலிசிலே நேற்றுக் களவு போனது பற்றிப் புகார் எழுதிக் கொடுத்திருக்கீங்க இல்லையா? அந்த நகை கிடைத்து விட்டதாகவும்; புகாரை வாபஸ் வாங்கிக் கொண்ட