பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்குறுதி o 229

மனத்துக்குள் எண்ணியபடியே, சரி சரி, சீக்கிரமாகப் போய் பார்ட்டியைச் சந்திக்கிற வழியைப் பார்’ என்று பக்கிரியைத் துரத்திவிட்டு உள்ளே போனான் ஹரி. ஆனால் அத்தனை நேரம் அங்கு நடந்த சம்பாஷணை களை ஒர் உருவம் கேட்டுக்கொண்டிருந்ததை பாவம் ஹரி எப்படி அறிவான்!

நெக்லெஸ் விஷயமாக நடந்த அனைத்தையும் காயத் திரியிடம் மட்டுமாவது கூறிவிட வேண்டும் என்றுதான் ஹரி துடித்தான். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க் கவே இல்லை.

ஹரிக்குத் தூக்கம் வரவில்லை. சுவரில் இருந்த கடிகாரம் மணி அடிப்பதை எண்ணிக்கொண்டே யிருந் தான். ஆனால் வீட்டிலுள்ள எல்லாரும் நல்ல துாக்கத் தில் இருந்தனர். முதல்நாள் கச்சேரிக்காக விழித்தது, பிறகு குறைப்பொழுதுக்கும், காணாமற்போன நகையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு தூங்காமல் இருந்தது எல்லாம் சேர்ந்து அனைவரும் நன்றாகத் தூங்கிக்கொண் டிருந்தனர்.

நடுச் சாமம் இருக்கும். தொழுவத்தில் கட்டியிருந்த பசு, ம்மே ம்மே” என்று பெரிதாகக் கத்தியது. அருகில் இருந்த கன்றுக்குட்டியும் தாயின் குரலுக்கு பதில்குரல் கொடுத்தது. பசு கத்துவதைக் கேட்டு விழித்துக்கொண்ட லட்சுமியம்மாள், காயத்திரி, கொல்லையிலே பசு கத்து கிறதே. வைக்கோல் இல்லையா?’ என்று கேட்டாள்.

விழித்துக் கொண்ட காயத்திரி, ‘இல்லையே அம்மா. நிறைய போட்டு விட்டுத்தானே வந்து படுத்துக் கொண் டேன்?’ என்றாள்.

  • பின் ஏன் இப்படி விடாமல் கத்துகிறது? கன்றுக் குட்டியும் கத்துகிறதே! ஒரு வேளை எல்லாவற்