பொருள் கிடைத்தது 237
ஹரி மனதில் காயத்திரியை வணங்கியபடி தம்பூராவை எடுத்து வைத்துவிட்டு எழுந்து போனான்.
அதற்குள் உள்ளே வந்த சுசீலா, என்ன உச்சர் ார், உங்களுக்கு நேற்றே தெரியும் இல்லையா?’ என்று கையிலிருந்த நெக்லெஸை ஆட்டியபடியே கேட்டாள்.
‘ என்ன அது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஹரி.
அது தான் உச்சர், நேற்றுச் சாயங்காலத்தி விருந்து சுத்திச் சுத்திக் கொல்லையில் தேடிச்கொண்டு இருக்கவில்லை?”
- நான் என்ன தேடினேன். சுசீலா?’. அவன் குரலின் ஸ்தாயி உயர்ந்து நின்றது.
சரிதான் ஸ்ார். ஏன் என்னிடமே இப்படி மறைக் lெர்கள்? இதோ என் நெக்லெஸ் கிடைத்து விட்ட து எல்லாருக்குமே, இதை நான் கொல்லையில் போட்டு விட்டுக் கச்சேரிக்கு வந்திருப்பேன் என்று சந்தேகம் போலிருக்கிறது. நீங்களும் இதைத்தானே நேற்றுச் சாயங்காலத்திலிருந்து கொல்லையில் தேடினர்கள். அக்கா கூடக் காலையில் கொல்லையைக் கூட்டிப் பெருக்கியிருக் கிறாள். ஆனால் யார் கண்ணிலேயும் படாமல் என் கையிலேயே கிடைத்திருக்கிறது பார்த்தீர்களா!’ என்று சுசீலா பெருமையுடன் கூறினாள்.
இதைக் கேட்டதும், நெக்லெஸ் கிடைத்து விட்டதா? இப்படிக் கொடு பார்க்கலாம்’ என்று ஹரி கையை
நீட்டினான்.
ஹரியினுடைய நடிப்பைக் கண்டு காயத்திரி மனத்
துக்குள் சிரித்துக் கொண்டாள்.
எந்தப் போலிஸ் உதவியுமின்றி நானே கண்டு
பிடித்துவிட்டேன்’ என்று சுசீலா குதித்துக் கொண்டே