பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முடிவு 275

ஆதுதலாகவும், சமாதானம் செய்கிற தோரணையிலும் அவன் கூறினான்.

இதைக் கேட்டதும் காந்தாமணிக்கு வியப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. சரிதான், நன்றாக இருக்கிறது, நீங்கள் பேசுவது! உங்கள் மனத்துக்கு ஆயாசம் அளித்து விட்டேனா என்று மன்னிப்புக் கேட்க நான் அல்லவா துடித்துக் கொண்டிருக்கிறேன்?’ என்று அவள் கூறியதும் இருவரும் சேர்ந்து கலகல வென்று சிரித்தனர்.

அந்த ஒலியைக் கேட்டுக் கீழே இருந்த காந்தா மணியின் தாய் வேகமாக மாடியை நோக்கி வந்தாள்.