பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணப் பேச்சு 283

சம்பாதிக்கிற நிலைக்கு வந்திருக்கிறான்? கையில் இருக்கிற, பிள்ளை எங்கே போய்விடுவான்?’’

நான் இப்போதே எதையும் அவசரமாகச் செய்யச் சொல்லவில்லையே! நமக்குள் இப்படி ஒர் அபிப்பிராயம் இருக்கிறது என்பது மட்டும் தெரியட்டும் என்றுதானே சொல்கிறேன்?’

அதைப் பற்றிக் கவலைப்படாதே. நானே சமயம்

வாய்க்கும் போது லட்சுமியிடம் சொல்லி விடுகிறேன். அவளுக்கும் இந்த ஏற்பாடு மிகவும் சந்தோஷமாகத்தான்

இருக்கும். ஹரியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நீ

சொல்லுவதுபோல் நாம் எது சொல்றோமோ அதுதான்

அவனுக்கு வேதவாக்கு’ என்று கூறிக் கொண்டிருந்த

பொழுதே வாசற் கதவை யாரோ படபடவென்று: தட்டினார்கள்.

சுந்தரி கதவைத் திறந்தாள். கையில் மருந்தும், பெட்டியுடன் குடும்ப டாக்டர் நின்றுகொண்டிருந்தார்.

வாருங்கள்’ என்று சுந்தரி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.

--

பாகவதரின் உடலை பரிசோதித்த டாக்டர், ராத்திரி நன்றாகத் தூங்கினாரா?’ என்று கேட்டார். தெரிந்தோ தெரியாமலோ சுந்தரி தலையை ஆட்டி விட்டு, உடம்பு

எப்படி இருக்கிறது டாக்டர்?’ என்று ஒர் எதிர்க் கேள்வியைக் கேட்டாள்.

டாக்டர் சுந்தரியைப் பார்த்து, பரவாயில்லை” என்று கூறிவிட்டு, பிறகு பாகவதரைப் பார்த்துக் கூறினார்: ‘நான் இப்படிச் சொல்லிவிட்டேனே என்று நீங்கள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு பாட ஆரம்பித்து விடக் கூடாது. நீங்கள் இனிமேல்தான் மிகவும் ஜாக்கி ரதையாக இருக்கவேண்டும். வயிற்றில் புண் இருக்கிறது.