பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சும் அழகு 309

“ஏன் இப்படிப் பயந்து சாகிறீர்கள்’

ஆமாம், நீ ஏன் இப்போது இங்கு வந்தாய்?”

“ஏன்? வரக்கூடாதா?’’

வரலாமா??

‘அப்படித்தான் வருவேன்.’

‘ஒ! இது உன் வீடு என்பதனாலா?’

‘இல்லை, நீங்கள் என்னுடையவர் என்பதனால்.’

ஹரிக்கு உடம்பெல்லாம் குப் பென்று வேர்த்தது.

‘உடம்பு ஏன் இப்படி, அநாவசியமாக நடுங்குகிறது? நான் என்ன பேயா, பிசாசா?’

நனைந்துவிட்ட அவனுடைய கழுத்தையும் நெற்றியை யும் துடைக்கப் போன காந்தாமணியின் கையை, ஹரி தடுத்து நிறுத்தினான்.

‘பேய்க்கும் பிசாசுக்கும் நான் பயப்படுகிறவனல்ல. சுடுகாட்டின் பக்கத்தில்தான் என் வீடு’ என்று கூறப் போனவன், இப்போது நீ போய்விடு காந்தாமணி, இல்லாவிட்டால் சத்தம் போட்டு அம்மாவைக் கூப்பிடு வேன்’ என்றான்.

  • அம்மாவை ஏன் கூப்பிட வேண்டும்? என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

“ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? நான் உங்கள் கண்ணுக்கு அழகாக இல்லைாய?’’

நான் அப்படியா சொன்னேன்?’

  • பின் ஏன் என்னைப் போ போ?’ என்று விரட்டிய படி இருக்கிறீர்கள்? நான் இங்கு வரக் கூடாதா? அவள் அவனையே பார்த்துக் கேட்டாள்; கண்களிலே காமம் மின்னியது.