பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 புல்லின் இதழ்கள்

‘வரலாம்; ஆனால் இந்த நிலையில் அல்ல; உன்னை நான் இப்படி எதிர் பார்க்கவில்லை.’

என்ன செய்ய? நான் இந்நிலைக்கு ஆளாகிவிட் டேன்.” காந்தாமணி அவன் தலையை வருடிக்கொண் டிருந்தாள்.

“அது உன்னுடைய குற்றம். ‘

‘இல்லை, என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் நீங்கள் தாம்.’ ---

நானா?’

“ஆமாம்.’

ஆச்சரியத்தினால், ஹரியின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. காந்தாமணி ஹரியின் தோள்களைப் பற்றியவாறு கூறினாள்: ‘உங்களுடைய இசையைக்கேட்டு என்றோ என் மனத்தைப் பறிகொடுத்திருந்தேன். ஆனால் இந்தச் சமீப காலத்தில், உள்ளத்தையும் குணத்தையும் கண்டு கொண்டபின், இனி நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு அந்தப் பாக்கியம் கிட்டுமா?”

காந்தாமணியின் பேச்சைக் கேட்கக் கேட்க, குடத்துள் விளக்காக அவனுள் அடங்கிக் கிடந்த ஒர் உணர்ச்சி, மலையின் உச்சியில் பற்றி எரியும் பேரொளியாகக் கிளம்பத்

தலைப்பட்டது.

ஹரி மிகவும் அமைதியாகயே கூறினான்: காந்தா

மணி, நீ இப்போது இங்கிருந்து போய்விடுவது நல்லது. எதையும் நாளை பேசிக்கொள்ளலாம்.’

  • காலையில்தான் நீங்கள் ஊருக்குப் போய்விடப் போகிறீர்களே!’ காலடியில் வந்து நின்ற பூனையைக் கையில் எடுத்து அணைத்துக் கொண்டவாறு கூறினாள்.

‘அதற்காக?'