சாயம் வெளுத்தது 331
அவர்களை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியுமே. பெரிய, ராஜ பரம்பரை. நான் அடிக்கடி அவளுடைய தாயாரைப் பார்ப்பதுண்டு. காந்தாமணிக்கு நீங்கள் பிரமாதமாகச் சிட்சை சொல்லி வைத்திருப்பதாக அவர்களுக்கு மிகவும் சந்தோஷம் என்றான்.
ஹரிக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அநியாயமாகக் காலையிலிருந்து வெட்டிப் பேச்சுப் பேசி பொழுதைக் கழித்து விட்டோமே என்று அவன் வருந்தி னான். இப்பொழுது அவர்கள் எங்கே போயிருக்கிறார் ? என்றான்.
அதுதான் எனக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஏதோ அவசரமாகக் காந்தாமணிக்குத் திருமணம் நிச்சயமாகி, அவர்கள் எல்லாரும் வடக்கே எங்கோ
போயிருப்பதாகக் கேள்வி’ என்றார்.
இந்தச் செய்தி ஹரியைத் திகைக்க வைத்தது. ஆயினும், அவன் தன் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள் வாமல், இனிமேல் அவர்கள் இங்கே எப்போது வ வார்கள், ஏதாவது தெரியுமோ?’ என்றான்.
இனிமேல் அவர்கள் இங்கு வருகிற உத்தேசமே இல்லை போல் இருக்கிறது. வீட்டைக்கூட விற்று விடப் போவதாகக் கேள்வி. ஆமாம், உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?’ -
அந்தக் கேள்வி ஹரியின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு மறுபுறம் பாய்ந்தது. நகமும் சதையும் போல், அந்தக் குடும்பத்திலேயே ஒருவனைப் போல் பழகி விட்டு, முடிவு இப்படியா ஆகவேண்டும்? என்ன பதில் கூறுவ தென்றே அவனுக்குப் புரியவில்வை.
நாராயணசாமி இங்கிதமாக - தன் கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்காதவன் போல், ஜாடையாகவே உள்ளே போய் விட்டான். இதற்குள் குழந்தைகள், விருந்