பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாயம் வெளுத்தது 3.35

ஹரி வீட்டினுள் நுழையும்போதே காயத்திரி அவனை ஜாடை காட்டி ஏதோ சொல்லி எச்சரிக்க முயன்றாள், ஆனால், அதற்குள் சுசீலா ஹரியைப் பார்த்து விட்டாள். வாருங்கள் ஸார். ஏது இத்தனை சீக்கிரம் திரும்பி விட்டீர்கள்? நாளைக்குத்தான் வருவீர்கள் என்றல்லவா நினைத்தேன்?” என்று கூறிக்கொண்டே வந்தாள்.

ஹரி உடனே, “நீ எதுதான் நினைக்கமாட்டாய்? இந்தப் பையைக் கொண்டு போய் அம்மாவிடப் கொடு,’ “ என்று கையிலிருந்த பையைச் சுசீலாவிடம் நீட்டினான்.

அதை வாங்கிப் பார்த்த சுசீலா, ஏது இத்தனை குடமிளகாய்? உங்கள் சிஷ்யர் கல்யாணராமன் கொடுத் தனுப்பினாரா?’ என்றாள்.

இல்லை, தஞ்சாவூரில் குடமிளாகாய் வியாபாரி ஒருவர் சாம்பிள் பார்க்கக் கொடுத்தார். பேசாமல் உள்ளே கொண்டு போய்க் கொடு என்றால்: அரட்டையடிக் கிறாயே” - சுள்ளென்று விழுந்தான் ஹரி. ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் சுசீலா பையை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

அறைக்குச் சென்று ஹரி குருவைப் பார்த்தான். அவர் நன்றாகத் துரங்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்த காயத்திரி, காந்தாமணியிடமிருந்து உனக்கு வந்த ஒரு கடிதத்தை, சுசீலா வாங்கிப் பார்த்து, எல்லா விஷயங் களையும் தெரிந்து கொண்டுவிட்டாள். ஏதாவது உளறிக் கொண்டே இராதே” என்று எச்சரித்துவிட்டுச் சென்றாள். ஹரி அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டான். அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கமே வரவில்லை.

இத்தனை நாள் போகாமல் இன்று பார்த்துத் தஞ்சாவூருக்குப் போனோமே. காந்தாமணியிடமிருந்து கடிதமே வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண் டிருந்த தற்கு, மாறாகக் கடிதமும் வந்து, அது நம் கையில்