பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவு காத்த கிளி 373

அம்மா, உன்னையும், என்னையும் அவர்கள் நம் பணத் திற்காகத்தான் இத்தனை காலம் ஏமாற்றி ேவந்திருக் கிறார்கள் என்பது இன்னுமா அம்மா உனக்குப் புரிய வில்லை?” என்று வசந்தி பட படப்போடு பேசிக் கோண் டிருக்கும்போதே சுந்தரி தன்னையும் மீறி, ‘வசந்தி’ என்று பெரிதாகக் கத்தினாள் .

இன்னும் ஒரு வார்த்தை நீ உன் அப்பாவைப் பற்றி இப்படியெல்லாம் பேசினால்-உன்னை என் மகளென்றும் பாராமல் அடித்து நொறுக்கி விடுவேன்’ என்று ஆவேசம்

வந்தவளைப் போல் கூறினாள்.

-ஹ-சம்-நீ வேறெ என்னம்மா சொல்லுவாய்? உன்னால் வேறு என்ன செய்ய முடியும்? உன் ஆசைதீர என்னை நீ அடித்தாலும் சரி! என் மனத்திலுள்ளதை, உன்னைப் போல் பயந்து ஒளிக்கப் போவதில்லைஉன்னிடம் நான் சொன்னவற்றை யெல்லாம் - ஒருநாள் அப்பாவிடமே கூறி நியாயம் கேட்கத்தான் போகிறேன். எனக்கு அவர்களால் ஒரு சமாதானமும் கூற இயலாது.

என்னையும் ஹரியையும் இணைத்து இணைத்துப் பேசி அவர்கள் செய்திருக்கும் கேலிகளுக்கு மரத்திற்குகூட உணர்ச்சி உண்டாயிருக்குமே! என் உள்ளம் அதைவிட அற்ப மானதாய்ப் போய்விட்டதா? ஹரி இல்லாவிட்டாலும், வேறு ஒருவனுடன் நான் சந்தோஷமாய் வாழ்ந்துவிட (யும் என்று எந்த அளவுகோல் கொண்டு அவர்கள் அளந்து பேசினார்கள் அம்மா? ஏமாற்றமே உருவாய் அவமானமே இன்னமாய்ச் சுசீலாவின் எதிரில் நான் கலங்கி நின்றதைக் கண்டும், என் வாழ்விலிருந்து ஹரியைப் பறித்துத் தானம் பண்ண உனக்கு என்ன அம்மா உரிமை இருக்கிறது? நான் தியாகியாக வேண்டுமென்று உன்னிடம் அழுதேனா?

‘கையிலுள்ளது தீர்ந்து, குடும்பத்தில் உள்ள எவ்வளவு சொத்துக்களை நீ விற்று விற்று அவர்கள் குடும்பத்