பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிக் கடன் 397

. சத்தியமா; இன்னமே அந்த வழிக்கெல்லாம் போக மாட்டேன். தம்பி இந்த ஏழைக் குடும்ப த்திலே விளக்கேத்தி வைக்கணும்னு, தெய்வம் உன்னை ஒரு காரணமாத் தான் எங்களுக்குக் காட்டியிருக்கு: அந்த தெய்வத்தோடு கருணைக்குப் பங்கம் வரும்படியா மனசாலே கூட நடத்துக்க மாட்டோம் தம்பி-என்று கரம் கூப்பியபோது பக்கிரியின் தொண்டை கரகரத்தது: கண்களிலிருந்து அவனையும் மீறிக் கண்ணிர் வழிந்தது.