மேககம் கலைந்தது 401
விட்டாயே!’ என்று உள்ளத்தினுள்ளே அரற்றினார். அப்பொழுது கணகனவென்று கபாடமணிகள் ஒலிக்கச் சந்நிதிக் கதவுகள் திறந்தன.
அங்கே
நீறு பூத்த மேனியாய், பெற்ற தாய் தந்தையரை வெறுத்து வந்த குமரனாய், அந்தக் குமரனே குருநாத னாய், குருநாதனே மண்டபத்திலே வந்தமர்ந்த ஹரியாய், ஹரியே குன்று தோறாடும் குமரனாய்த் திருக்கல்யாணக் கோலத்தில் நின்றிருப்பது போல் பாகவதர் இன்பக் கன வொன்று கண்டு கொண்டிருந்தார்.
கனவென்றால் கலைய வேண்டிய ஒன்றுதானே?
o ஐயா, ஐயா!’ என்று அன்பு ததும்பும் மெல்லிய குரலில் அழைக்கிற ஒலி கேட்டு உணர்வு திரும்பி, விழி திறந்த பாகவதர், அப்போது-விழி கொள்ளாக் காட்சி ஒன்று கண்டார். ஹரியும் சுசீலாவும், கழுத்தில் மலர் மாலைகளுடன் அவர் காலடியில் விழுந்து வணங்கி எழுந்தனர்.
அப்படியே அவர்களை வாரித் தழுவிக் கொண்ட பாகவதர்: அவர்கள் கையிலிருந்த திருநீர்மலைத் திருமாலின் பிரசாதமான திருத்துழாயைப் பக்தியுடன் வாங்கிக் கொண்டு, அடுத்த வருஷம் ராமச்சந்திரனைப் போல் ஒரு பிள்ளையைப் பெற்று என் மடியில் கிடத்த வேண்டும்’ என்று சுசீலாவை ஆசிர்வதித்தார். கண்களில் ஆனந்த பாபஷ்பம் துளும்ப ஹரி சுசீலாவை நோக்கினான். நாணத்தால் அவள் இமைகள் தாழ்ந்தன.
பாகவதர் மனத்தில் இருந்த ஒரு பெருங்குறை நீங்கியது. உயிரோடு இருக்கும் போதே சுசீலாவின் திருமணத்தை நடத்திப் பார்த்துவிட வேண்டு மென்று விரும்பினார்; அவர் நடத்தாமலே பார்த்து விட்டார். எல்லாருமாகச் சேர்ந்து எவ்வளவு பிரமாதப் படுத்தி