பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரோதயம் - 413

எல்லாரும் குளித்து விட்டுச் சுவாமிநாதசுவாமியைத் தரிசனம் செய்யக் கிளம்பினர். தரிசனம் முடிந்து மத்தி யான்னச் சாப்பாட்டிற்குப் பிறகு சுந்தரி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

சுவாமிமலைக்குப் போய் வந்த அம்மாவின் மூலம் எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்ட வசந்தியின் உதடுகளில், ஒர் அலட்கியப் புள்னகை தோன்றி மறைந்தது. தாய் தன் மகளையே பார்த்துக் கொண் டிருந்தாள்.

-எப்படி இருந்த பெண் எப்படி ஆகிவிட்டாள்: வெளிக்கு ஒன்றுமே நடவாதது போல் அவள் காண் பித்துக் கொண்டாலும், ஹரியை இழந்து விட்டோம்” என்ற அதிர்ச்சி அவள் உள்ளத்தை பூச்சி மாதிரி உள்ளுற அரித்து தின்று கொண்டேதான் இருக்கிறது என்பதை அவளால் மறைக்க முடியவில்லையே!

“இந்த அசட்டுப் பெண் ஏன் இப்படி இல்லாததை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறாள்: ஹரியை நம்பித் தானா இவள் பிறந்தாள்!” என்று வசந்தியின் மீது சுந்தரிக்குக் கோபங்கூட வந்தது. ஆனால் யாருடைய கோபதாபங்களையும் மதியாமல், காலம் இறக்கை கட்டி

அதன் பாட்டில் பறந்து கொண்டிருந்தது.

அன்று வெள்ளிக் கிழமை. துளசி மாடத்துக்கு விளக்கேற்றிக் கொண்டிருந்த சுந்தரியிடம், சுவாமி மலையிலிருந்து ஒர் ஆள் வந்து, ‘அம்மா, உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்’’ என்று கூறினான்.

என்ன விஷயம்? ஏதாவது தெரியுமா?’ என்று ஒன்றும் புரியாத பரபரப்புடன் கேட்டாள் சுந்தரி.