பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரோதயம் 41

சுந்தரியைக் கண்டதுமே காயத்திரி, நீங்கள் பாட்டியாகிவிட்டீர்கள்: உங்களுக்குப் பேரன் பிறந்திருக் கிறான், சித்தி!’ என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டே கைநிறையச் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டாள்.

முன்னாலேயே சொல்லி அனுப்பக்கூடாத, அக்கா?’ ‘ என்று லட்சுமியம்மாளிடம் சுந்தரி மிகவும் குறைபட்டுக் கொண்டாள்.

எனக்கு எப்படித் தெரியும், சுந்தரி? மருத்து வச்சிக்கே தெரியவில்லை. இன்னும் இரண்டு நாள் ஆகும். இது ஊமைவலி, குருட்டுவலி, என்று சொல் விக் கொண்டே இருந்து விட்டாள். அதிசயமாகத் தான் இருக் கிறது. அரை மணி நேரத்தில் பிறந்து விட்டான்’ என்று சுந்தரியை அழைத்துச் சென்று காட்டினாள்.

குழந்தையின் அழகைப் பார்த்துவிட்டு, அப்படியே சுசீலாவைத்தான் உரித்து வைத்திருக்கிறது’ என்று எல்லாரும் பேசிக் கொண்டிருந்தனர். பாகவதர் பிள்ளைக் குழந்தையைப் பார்த்துப் பூரித்துப் போனார். எல்லாரும் ஹரியின் வரவையே மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஹரி மறுநாள் விடியற்காலை வந்து சேர்ந்தான். சுசீலாவுக்குப் பேறு காலம் என்பது அவனுக்குச் சிக்கல் கச்சேரிக்குப் புறப்படும்போதே தெரியும். முருகன் சந்நி தியில் அவன் கச்சேரி நடந்தது. சிங்காரவேலனே அவன் கண் முன் வந்து நிற்பது போல் இருந்தது. இதுவரை, கச்சேரியை ஒரு தோழிலாகவும், அந்தத் தொழிலை மிகவும் உயர்ந்ததாகவும் திறமையுள்ளதாகவும் செய்ய வேண்டும் என்பதுதான் அவன் உள்ளத்தில் இருந்தது பிறகு ஞானம் ஏற ஏற, அவன் அந்த வித்தையைப்