பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புல்லின் இதழ்கள்

யெல்லாம் பொருட்படுத்தாத ஹரி அம்மாவின் கவலையை உணர்ந்து மாமாவைத் தேடி ஆற்றை நோக்கி வேகமாக நடந்தான். ஆனால் அங்கே அவரைக் காணவில்லை.

ஹரிக்குத் ‘திக் கென்றது.

நீண்ட நேரம் அங்கும் இங்கும் தேடிவிட்டு, ‘அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவது?’ என்பதே புரியாமல் கவலையுடன் வீட்டை அடைந்தான், ஆனால் வாசலுக்கு வரும்போதே உள்ளே நாணா மாமாவின் குரல் கேட்டது. -