பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புல்லின் இதழ்கள்

தந்தையும் மகனும் தழுவிக்கொண்டு நிற்பதைப் போல் இரண்டு தம்பூராக்களும் சுருதி சுத்தமாக நன்கு இணைந்து வீடு முழுவதும் நாத ஒலி பரப்பின. அதன் பிறகு பொங்கி எழுந்த இசைவெள்ளத்தில்- மனத்தில் இருந்த கவலைக் குப்பைகள் கண்ணுக்குத் தெரியாமல் மூழ்கி மறைந்தன. அப்போது யாரோ படபட” வென்று கதவைத் தட்டுகிற சப்தம் கேட்கவே ஹரி தம்பூராவை நிறுத்தினான். பாகவதர் தம்மை மறந்து பாடிகொண்டே இருந்தார். “.