இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு தந்தவரே : கவிதைக் காகப்
புதுப்பரிசு பெற்றவரே ! சமுதா யத்தை
நோக்காட்டில் தள்ளுகின்ற பழமை தன்னே
நொறுக்கிவரும் தஞ்சாவூர்க் கவியே : இங்கே
நீர்க்குடங்கள் நடுவினிலே வைக்கப் பெற்ற
நெய்க் குடத்தைப் போன்றவரே ! உம்மை நாங்கள்
வே ரி.ப் பலாவின் ச2ளயென்று கருது கின்ருேம் !
மேலான தமிழில்பா ராட்டு கின்ருேம் !
பகுதியெலாம் சொற்களுக்குத் தக்லமை தாங்கும்
பழங்களெலாம் விதைகளுக்குத் தலைமை தாங்கும்
தகுதியெலாம் திறமைக்குத் தலைமை தாங்கும்
தந்தங்கள் பற்களுக்குத் தலைமை தாங்கும்
மிகுதியெலாம் நீரானுல், கடலாய்த் தோன்றும்
மிச்சமெலாம் அறிவானுல், புகழாய்த் தோன்றும்
விகுதியென நிற்காமல் பகுதி போன்று
விளங்குகின்றீர் ; ஆதலினுல் போற்று கின்ருேம்.
- ~ * - உவகை க:து சுர தா.