பக்கம்:பூங்கொடி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. இசைத்திறம் உணர எழுந்த காதை

அடிகளார் ஆணை

பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள்

மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன கல்லிசை யாண்டும் பாவிடச் 5 சுவடியின் துணையால் கொண்டியற் றென்று

தவறிலா அடிகள் சாற்றினர் என்றனள் ;

அருண்மொழியும் இசைதல்

ஆம்என் மகளே அது உஞ் சாலும் கோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுகல் வேண்டும் ; 10 பூண்டநல் லன்பரைப் பூரியர் கொலைசெய

ஈண்டிய துயரால் இசைத்தொழில் துறந்தோம் ; இவ்வணம் நம்மனேர் இசைப்பணி வெறுத்திடின்

செவ்விய அவ்விசை சீருறல் யாங்கனம் ?

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/111&oldid=665586" இலிருந்து மீள்விக்கப்பட்டது