பக்கம்:பூங்கொடி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

16. எழிலியின் வரலாறறிந்த

காதை

இசைச் செல்வி

கன்னித் தமிழின் நன்னலங் காப்போப் ! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ! அறமனச் செல்வி, அழகின் விளைகிலம்

எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள் தான்

இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி

இசையே பாட இசையாள், தமிழில் ஒன்றெனும் இயலும் ஒதித் தெளிந்தவள், மன்றினில் கிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில் ஒன்றிய பொருளின் உணர்வொடு பாடி இசைவய மாக ஈர்க்குங் திறத்தினள், நரம்பிசை பிழையாக் குரலால் நெஞ்சம்

உருக இன்னிசை ஒதும் பெற்றியள் ;

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/117&oldid=665592" இலிருந்து மீள்விக்கப்பட்டது