பூங்கொடி
60
65
70
75
80
முழுக்கப் பொருளும் முடித்தவர் அல்லர், பழுதிலா அணியும் படித்தவர் அல்லர், ஐவகை இலக்கணம் அனைத்தும் இன்றிச் செய்யுள் எழுதி உய்வோர் பலரே !
தமிழைப் பழிக்க விடுவதோ!
இவர்தம் பாடல் எழிலுற அச்சுச் சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம் விடுத்த இச் சுவடிகள் அடுத்திவண் வருமவர் படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப் பழிப்பவர் ஆவர் ; பைந்தமிழ் வளர்ச்சி இழித்துரை கூறுமா றிருக்கதே என்பர் : செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே விடுத்திடல் கன்றாே விளம்புதி மகளே ! கிலைத்திடுங் கவிதை கொடுத்திடுங் காப்பியம் விளேத்திடல் வேண்டும் பலப்பல இன்றே, அருமைத் தமிழ்க்கிஃ தாக்கப் பணியாம், தரும்கமைத் தலைமுறை தலைமுறை வாழ்த்தும் ;
போலிக் கவிதைகள்
போலிக் கவிஞர் புனைபவை புனேக ! வேலி யிடினும் விளைபவை விளையும் ; பயனும் பண்பும் பழுகிய நூல்கள் வியனுற வெளிவர முயலுதல் வேண்டும் ; புதியகம் சுவடிமுன் போலிச் சுவடிகள் கதிரோன் முன்னர்க் கைவிளக் காகும் ;
நாளைய உலகம் சந்தமிழ் ஏத்தும் ;
110