195
200
205
210
215
220
ெ பருகிலக்கிழார் வாழ்த்திய காதை
பெண்மையின் உருவே கண்ணின் மணியே : புண்ணிய மகளே ! பூங்கொடி அன்னப்! பண்ணிசை நுகரும் பரிவுடன் அழைத்தனென், என்செவி குளிர என்னகம் மகிழ கின்னிசை வார்க்க நேரிழை ஒல்லுமோ? புதுமைச் சுவடியிற் பொதிந்துள உண்மைகள்
முதுமை யுற்றேற்கு மொழிகதில் லம்ம! எனவாங்கு இரப்பார் போல இயம்பின ராக,
பூங்கொடி பாடுதல்
பரப்புதல் இசையைப் பணியெனக் கொண்டுளேன், புரப்பது கடனெனப் பூண்டுளிர் நீவீர், தனியள் எனக்குத் தந்ததும் ஆணே இனிதெனக் கொள்வேன், இயலும் வகையான் கெரிங் கன கூறிச் செல்லுதல் என்கடன், பெருந்தனம் உடையீர் பிழைபொறுக் கருள்க ! என்றவள் பணிந்துரை இயம்பி மீனவன் தொன்று முதிர்க்க தாயகன் மொழியாம் தமிழிசை மீண்டும் காணியில் கழைக்கத் - தங்கநற் சுவடியின் தகவெலாம் உரைத்துப் புந்தியிற் பதியப் பொதிந்துள துணுக்கம் முறைமுறை தெரித்தும் இடையிடை இசைத்தும் ஈறைபழுக் கொழுகும் துறைத்திக் தமிழின் பழம்பெரும் பாடல் பாங்குடன் பாடியும் முழங்கிசை வல்ல முத்துத் தாண்டவர் வழங்கி யருளிய வளர்தமிழ்ப் பாட்டும், அரும்பெறல் இசைவல அருணு சலக்கவி திறம்பட நல்கிய தீக்தமிழ்ப் பாட்டும்,
147