இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21. நூல்நிலையம் அமைத்த காதை
பூங்கொடி வேண்டல்
வாழிய என்றென வாழ்த்திய பெரியீர்! ஏழிரண் டாண்டுகள் இடரொன் றுளதெனக் கூறிடக் கேட்டுளம் கொடுந்துயர் உற்றேன் : மாறிய தவ்விடர் எனும்.அம் மாற்றம் 5 தொடுத்துடன் மொழிந்தீர் அடுத்துளம் மகிழ்ந்தேன்;
படுத்திய அவ்விடர் பாவைகான் உணர எடுத்து மொழிய இயலுமோ பெரும !
என்றிளம் பூங்கொடி இாங்கினள் வேண்ட,
மகள் வரலாறு
- நன்று கனிமொழி நவிலுவென் கேண்மோ ! 10 உருவும் எழிலும் உன்போல் ஒருத்தி,
பருவம் கிறைமகள், பாவிஎன் மடமகள், உருவளர் முழுமதி ஒப்பத் திகழ்ந்தனள், ஆடலும் பாடலும் அவட்குயிர் ஆகும், எடவிழ் கோதை எனக்குயிர் ஆகும்,
15 நாடிய துறையில் நன்கனம் தேர்ந்து
149