பக்கம்:பூங்கொடி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

23. சிறைப்படு காதை

பூங்கொடி வருதல்

பெருகிலக் கிழவர் பெட்புடன் மகிழ்ந்தே அருளிய வாழ்த்தும் அவ்வூர் காப்பண் ஞாலங் காணுக் கோலங் கொண்ட துலகம் அமைக்க நுவல்மொழி உறுதியும் பெற்றாற் பூங்கொடி குற்றமில் மனத்துள் உற்றெழு மகிழ்வால் சொற்றமிழ் இசைகரு மாட மாளிகை மன்றினுட் புகுதரக் கூட வாயிலில் குருதி கண்டனள் ;

பூங்கொடி மயக்கம்

கண்டவள் நடுங்கிக் கால் தடு மாறிச்

சண்டிலி சண்டிலி’ என்றுரை சாற்றியும் கண்டிலள் அவளைக் கடும்பே ரமைதி கொண்டு திகழ்ந்தது கோவுயர் மாளிகை : அஞ்சிய ஒண்டொடி ஆங்காங் கோடித் துஞ்சுவள் அவளெனக் துருவினள் யாண்டும்

166

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/185&oldid=665667" இலிருந்து மீள்விக்கப்பட்டது