பக்கம்:பூங்கொடி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

50

55

60

யாழ்துரல் பெற்ற காதை

செயற்கருஞ் செயல்பல செய்திடும் பெரியார், கற்றவர் குழுமும் கடல்சூழ் ஈழம் பெற்றவர், மொழிபல கற்றவர், கற்றவர், எழில்மயில் வாகனர் எனும் பெயர் பெற்றவர் பொழிலிடைத் திகழும் வளமனை உற்றனர்;

அறிமுகஞ் செய்தல்

வளமனை வருமயில் வாகனர்க் காணலும் உளமுறு மகிழ்வால் உடனெழுந் கோடி நல்வர வேற்ற நலங்கிளர் வள்ளல் அவனிருந் தோர்கமை அறிமுகஞ் செய்தனர் ; அவர்கமக் கிவரை அறிமுகஞ் செய்தனர் ; தாயும் அடிகளும் தையல்பூங் கொடியும் கோயும் மகிழ்வால் கொழுதனர் ஆங்கண் ;

மயில்வாகனர் வாழ்த்துரை

பூங்கொடி ஏற்றுள பொதுப்பணி நாட்டில் ஒங்குயர் நலக் கரும் உயர்வுறும் கம்மொழி எனமயில் வாகனர் ஏற்றம் உரைத்து மனமுறும் உணர்வால் வாழ்த்துரை கூறி, ‘இளங்கொடி யாகிய நலங்கிளர் பூங்கொடீ ! விளங்குகின் பணிக்கு வியன்.துணே யாக யாழ்ஆால் என்னும் இந்நூல் பெறுக!

யாழ்நூலின் சிறப்பு

எழிாண் டாண்டுகள் இடர்பல துய்த்தும் ஏழிசை யாழின் இயற்றிறம் யாவும் நுண்ணிதின் ஆய்ந்து துவல்வதிப் பெருநூல் : நண்ணுமிம் முயற்சியில் நான்படு துயரம்

199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/218&oldid=665703" இலிருந்து மீள்விக்கப்பட்டது