பூங்கொடி
70
75
80
85
90
அருண்மொழியும் பிறரும் வாழ்த்துதல்
அயல்நா டேகும் அரிவையைத் தழுவிக் கயல்விழி அருண்மொழி கண்ணிர் மல்கி, வெல்ககின் பணியே வெல்களும் தமிழே, செல்கரீ யாண்டும் செந்தமிழ்ப் பண்பைச் சொல்கரீ சொல்கரீ சோர்வுறேல் கண்மணி ! பல்கலைப் பொருளும் பயில்கரீ என்றனள் ; ஆண்டுள பெரியரும் ஆயிழை வாழ்கென மூண்டெழும் உணர்வில்ை மும்முறை வாழ்த்தினர்;
பூங்கொடியின் அயல்நாட்டுச் செலவு
தமிழ்த்து தேகும் சான்றாேர் குழுவினுள் புகழ்த்திரு மகளாம் பூங்கொடி சார்ந்து பயன மாகிப் பறந்தனள் வானில், அயலில் கின்றார் அனைவரும் மீண்டனர் : வானிற் பறந்தும் மரக்கலம் ஊர்ந்தும் வேனிற் பருவம் விழுபனிப் பருவம் நானிலத் தோங்கும் நாடுகள் கடந்து கடங்காங் காங்குக் கடமைகள் ஆற்றிப் படர்வோள் ஆயிடைப் பன்மொழிப் பயிற்சியும்,
சான்மார் நாட்டில் பூங்கொடி
தமிழ் நூல் மாட்டுத் தணியா வேட்கையும், கிமிர்மனச் செருக்கால் தமிழ்மொழி பழிப்போர் இமிழ்கட லுலகில் எவரே யாயினும் விருப்பும் வெறுப்பும் விடுத்துப் பழிமொழி மறுத்துரை வழங்கும் பொறுப்புணர் பண்பும், உடையவர் இளையவர் உலகறிங் தொழுகும் கடையவர் சான்மார் எனும்பெயர்க் குரியவர்
208