பூங்ெ காடி
அடவோ இவர்கம் அரும்பெரும் முயற்சி
கெடுமோ? இங்குக் கிளைபோற் புகுமொழி
தடுத்து கிறுக்கத் தக்கார் பாருளர்?
அடுத்த துயரெலாம் அகமகிழ் வுடனே 20 மடுத்துத் தங்கலம் விடுத்தனர் ஆஆ..!
கொடுக்குமிவ் வறப்போர் கொடுக்கும் வென்றியே
என்றால் அலுரைகளும் இடையிடை மிடைந்தன;
மகளிர்க் கடுக்குமோ
மகளிர்க் கித்துணே மனச்செருக் காகுமோ? தகவுடைத் தொழிலோ கன்றுணே, மக்கள், 25 இல்லறம், குடும்பம் என்றுளங் கொளாஅது
மெல்லியல் மாதர் மீப்படு செயலிற் செல்லுதல் அறமோ? சீச்சீ இழிவாம் ; தெருவிடை இவ்வணம் தெரிவையர் விலங்குடன் வருவது நானுத் கருவ தென் றரிவையர் 80 அறிவுரை போற்சில அறைந்தனர் ஆங்கண்
மகளிர் வீரம்
ஆடவர் போல அரிவையர் தாமும் நாடும் மொழியும் நமதென எண்ணிப் பாடு படுமிவர் பண்பினைப் போற்றுதும்: விஞ்சுத் துயரினை வீறுட னேற்கும் 35 வஞ்சியர் நெஞ்சுரம் வாழ்த்துதும் வாழ்த்துதும்;
நெடும்பகை தமிழுக்கு நேர்ந்தகே என்று குடும்பப் பணியாக் குறித்தறப் போரிற் பங்கு கொண்டதோர் பாங்கினே ஏத்துதும் ; மங்கையர் இவரென மதித்தலு மின்றிச் - 40 செங்கை பிணித்துத் தெருவிடை யிழுத்துச்
232