பூங்கா புக்க காதை
நம்புவர்; அதனுல் நலிவுங் குறைகுவர்;
பூங்கொடி தனக்கோ பொங்கிய துயரம்
நீங்கிற் றிலது நெஞ்சம் விம்மத் 20 தேம்பித் தேம்பித் தெரிவை அழுதனள் ;
பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்
பூங்கொடி கண்ணிர் புத்தகம் கனத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, ஏனே கலங்கினே? 25 மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே
தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ; நாமே கலங்குதல் நன்றாே நம்பணி ஆமோ பூங்கொடி அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக கவலை
80 அலர்பூங் காவுள் ஆறுகல் கிட்டும் ;
பூம்பொழில் தந்திடும் ஐம்புல இன்பம் பலர்முகம் கண்டும், பாட்டொலி கேட்டும், சிறுவர் ஆடிடும் சிரிப்பொலி கேட்டும், நறுநீர் அருந்தி நளிகனி உண்டும், மலர்மணம் நுகர்ந்தும், வருசிறு தென்றல் 85 களிருடல் வருடிக் கருகலம் பெற்றும்
களிமிகு மனத்தொடு திரும் பெனக் கழறினள்,
பூங்கொடியின் அழகு உடனுறை தோழி அல்லி உரைப்போள் பூங்கொடி நல்லாள் பொற்பின் செல்வி, தேங்கெழில் இளமை செறிதரு சிற்பம்,
13 .