பூங்கொடி
{}0
95
100
105
110
எங்கணும் அமைதி இலங்க ஐம்பொறி பொங்கும் உணர்வெலாம் புதியதோர் உணர்வாய்க் குவிங்கன மேடையில்; குள்ள நரிச்செயல்
பொதிந்த நெஞ்கினர் பொல்லாங் கிழைத்தனர்;
சிறியர் செய்கை
கற்களை வீசினர் காரிருள் இடைகின் றற்பச் செயலென அறியார்; அறிஞர் நெஞ்சிற் பதிந்த கருத்துரை நிலமிசை விஞ்சிப் படர்வகை விரும்பாச் சிறியர் புன்மைச் செயல்செயப் புறப்படல் படரிருள் புன்மைக் கணத்தைப் புறங்காட் டச்செயும்; கதிரோன் தன்னைக் கையால் மறைக்கும்
மதியோர் செயலினை மானும்; அந்தோ!
பூங்கொடியின் கனன்றுரை
கற்கள் வீழலும் கண்கள் சிவந்தனள் ‘எற்கெனே அழைத்திர் இகழ்வதற் கோ? என துவன்றனள்; ஒருகல் து கற்படச் செங்கீர் சிந்திச் சிவங்கன மேடையும் ஆடையும்; கனன்றனள் சொல்லினேக் கனலெனச் சிந்தினள், பெண்மையில் ஆண்மை பிறக்கலுங் கூடும் உண்மை உணர்த்தினள் ஊரினர்க் கவ்விடை: சான்றீர் பெரியிர் சாற்றுவென் கேண்மின் ஆன்ற பெரும்புகழ்த் தமிழின் அருமை கேடுறல் நன்றாே கிளைபோல் வருமொழி பீடுறல் கண்டும் பேதைமை பூணல் மாண்பன் றென்றேன், மடமைச் சேற்றில் விழ்ந்து மடிதல் வேண்டா என்றேன்,
42