பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

நேரத்தில், ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு, தொடர்ந்து வரும் அடுத்தாட்டத்தில், தவிர்த்து ஆடுவதற்கேற்ற தகுந்த வழிகளையும் உபாயங்களையும் கூறிக் கொண்டு, வெற்றிக்கேற்ற பாதைக்கு வழி வகுத்துக் கொள்ள உதவ வேண்டும்.

15. எப்பொழுதும் ஒரு பந்தாடும் மட்டை மட்டும் இருந்தால் ஆடுவதற்கு போதுமானதாக அமையாது. ஆட்டத்தின் இடையிலே நரம்புகள் (Guts) அறுபட்டுப் போகும்போது, அதைவைத்துக் கொண்டு நன்றாக ஆடவும் முடியாது.

ஆகவே, இரண்டு பந்தாடும் மட்டைகளை ஆபத்து உதவிகளாக வைத்திருக்க வேண்டும். 'ஒரே பந்தாடும் மட்டையில் ஆடினால்தான் எனக்கு நன்றாக ஆட வரும்’ என்று கண்டிப்பாக வாதமாகக் கூறுவோரும் உண்டு. அத்தகையவருடைய பந்தாடும் மட்டை நரம்புகள் அறுபடாமல், உடனே அதனை சரிசெய்து கொடுத்து விடக்கூடிய உதவி சாதனங்களையும் கூடவே வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு, பயிற்சியாளரானவர் ஒரு குழுவை உருவாக்குவதிலிருந்து, பயிற்சிகளைத் தந்து பண்பாட்டையும், ஆட்டத்திறன்களையும் வளர்த்துவிடும் வல்லவராகத் திகழ்ந்து ஆடுகின்ற நேரந்திலும் அமைதி காத்தும், விதிகள் கூறும் வழியிலே வழிநடத்தியும் செல்கிற பண்பாளராகத் திகழ்கின்றார்.

பயிற்சியாளர்களின் போற்றற்குரிய பேருழைப்பினால் தான், பந்தாட்டத்திலும் திறன்கள் பெருகி வளர்கின்றன. ஆட்டக்காரர்கள் பண்பிலே உயர்ந்தால், ஆட்டமும் உயரும். தடாகத்தில் நீருயர்ந்தால் தாமரையும் அல்லவா உயர்கிறது. அதுபோல்தான்.

பூப்-9