பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

காண்கிறோம். ஒரு போட்டி ஆட்டம் முடிந்து, மறு போட்டி வருவதற்குள், சிறந்த பல புதிய ஆட்டக் காரர்கள் தோன்றி விடுகிறார்கள் என்றால், அதற்குக் காரணமும் உண்டு. அதாவது பூப்பந்தாட்டத்தை எளிதில் பழகிக் கொள்ள முடியும் என்பதே அந்த அடிப்படை ரகசியமாகும்.

நல்ல ஆட்டக்காரர்களாக வந்தவுடன் தொடர்ந்து. பழகிப் பயிற்சி செய்தால் தானே வந்த திறன்வளர்ந்து பெருகும்?’ வந்தது போதும் என்று திருப்தியடைந்து விடுகின்றார்கள். பலர் இதற்குமேல் நமக்கு ஆற்றல் வளராது என்று ஆறுதல் அடைந்து கொள்பவர்கள் பலர். இனிமேல் கற்றுக கொள்ள என்ன இருக்கிறது என்ற இறுமாப்புடன் விளையாட்டை ஒதுக்கிவிட்டு உலவுபவர் பலர். இப்படியாகத் திறமையுள்ள ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை ஏறுவதும் இறங்குவதும் மாறுவதுமாகவே அமைந்துவிட்டிருக்கிறது.

இது போன்ற ஒரு சோக நிலை, புதிதாகத் தோன்றும் பூப்பந்தாட்டக்காரர்களிடையே நிகழக்கூடாது என்பது தான் நமது ஆசை. ஆகவே, கற்றுக் கொள்கின்ற இளைஞர்கள், பெண்கள், தொடர்ந்து ஆடி, தேர்ந்து செழித்து, புகழ் பெற்று விளங்குமாறு வாழ்வதே இந்த ஆட்டத்திற்கு நாம் செய்யும் அரிய தொண்டாகும்.

புதிதாக ஆட்ட முறைகளைப் பழகிக் கொள்வோர், தொடக்கத்திலே தவறாகப் பழகிக் கொள்ள ஆரம்பித்தால், வளர்ச்சிக்குன்றிப் போகும். ஏதோ முன்னேற்றம் கிடைப்பதுபோல் முதலில் தோன்றினாலும், என்னதான் முயன்றாலும், எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்காமலே