இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
• உச்சிவெயில் நடுப்பகலில் ஒருநாள்
உடுப்பிஹோட்டல் அடுப்படியில் மணிக்கணக்காய்ப்
பச்சைவேர்வையில் குளித்துவந்து சர்வர்ப்
பையன்கொடுத்த புதுப்பால் காபியருந்தி
எச்சரிக்கையாக மனத்தெண்ணித் தீர்மானித்தே
இன்னொரு புதுக்கவிதை வகையாக
நிச்சயம் எழுதிடணும் என்றே
நினைத்துத் திட்டம் வைத்திருந்தும்
ஒன்ஸைட் பேப்பர் கிடைக்கவில்லை-அதனால்
என்கவியை இன்னும் நான் படைக்கவில்லை.
ஆகாயம் பூமி கடல் என்றும்
ஆதவன் சந்திரன் விண்மீன்என்றும்
ஆதாயம் பார்த்தன்றே கவிவாணர்
அத்தனையும் பாடிவிட்டுப் போனபின்னர்