பக்கம்:பூமியின் புன்னகை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா

25



மற்றுமொரு பிறப்பில்நான் இல்வுலகில்
மானிடனாய் வந்தாலும் நிச்சயமாய்ச்

சுற்றுமொரு சிறிதுணியால் இடைமறைத்துச்
சுடுகாடு காத்திடுவேன் இல்லையெனில்

மற்றுமொரு கோல் பிடித்து மாடுமேய்ப்பேன்
பதவிகளில் சிக்க மாட்டேன்

முற்றிலுமே தொண்டு செய்யும்
முழுமனித வாழ்க்கையினைத் தேடிடுவேன்.
(நவம்பர், 1971)