பக்கம்:பூமியின் புன்னகை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பூமியின் புன்னகை

 
3 குத்தகை விட்டது போலோர் ஆட்சியிலே
கூடிக் கூடிக் கொள்ளைகள் அடித்துவிட்டார்!
பத்தரைமாற்றுத் தங்கமெல்லாம்
பாளம் பாளமாய்ப் பதுக்கி விட்டார்.
சொத்துக் கணக்கென் றொருகுரல் எழுந்ததுமே
சோர்ந்து தளர்ந்து மிரண்டு விட்டார்.
பத்துக் குரல்கள் சேர்ந்தொன்றாய் அந்தப்
பாமரன் குரலை அடக்கி விட்டார்.

4 சுத்தர்கள் துணிந்து பேசவும் அஞ்சும்
சுயநலவாதிகள் முரடர்கள் கட்சியிலே
பித்தனைப் போலொரு நல்லவன் வந்தே
பேதைகள் ஏழைகள் பாமரர் சார்பினிலே
சொத்துக் கணக்கென் றொருகுரல் எழுந்ததுமே
சோர்ந்து தளர்ந்து மிரண்டுவிட்டார்.
பத்துக் குரல்கள் சேர்ந்தொன்றாய் அந்தப்
பாமரன் குரலை அடக்கி விட்டார்!

5. மெத்தன மாக மறந்தது போல நடிப்பவர் மத்தியிலே
மெல்ல எழுந்து பேசவும் தெரியா மந்தையிலே
வித்தகமாக ஏழையின் சிரிப்பினை
வித்தைகள் காட்டும் சித்தர்கள் சந்தையிலே
அத்திகள் பூத்ததுபோல் ஒராள் அவசரமாகச்
சொத்துக் கணக்கென் றொருகுரல் எடுத்ததுமே
பத்துக் குரல்கள் சேர்ந்தொன்றாய் அந்தப்
பாமரன் குரலை அடக்கி விட்டார்!