பக்கம்:பூமியின் புன்னகை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பூமியின் புன்னகை

துட்டுக்கு மண்சுமக்கும்
சுமையாட்கள் சுமந்திருப்பார்
துயரங்கள் நெடுநாளாய்க்

கட்டுக் கடங்காத
சனப் பெருக்கால் கரிமேடு
நரிமேடு குளமெல்லாம்

பெட்டிக் கடைகள்போல்
வீடுகளாய் உருவாகிப்
புகலிடங்கள் தந்துவரச்

சங்கப் பலகையைப் போல்
ஆகிவிட்ட தற்காலத்
தமிழ் மதுரை நகரத்தில்

அங்கயற்கண் அம்மையொடு
சுந்தரரும் அறைகளில்தான்
வசிக்கின்றார் இடப்பஞ்சம்!

எங்கேனும் வெளிப்போந்து
உலாவிடவோ இருவருக்கும்
திருவிழாக்கள் பலப்பலவாம்.

தென்காற் குளத்தருகே
பரங்குன்றில் திருக்குமரன்
முருகனுக்கோ மலைவாசம்!

திருமால் அழகர்மலைப்
பெருமாளும் தினந்தோறும்
மலைவாசம் என்பதனால்