இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா.பா
49
வாலிப வயதில்
வீதிகள் தோறும்
கோல விழிகளில்
குங்கும நெற்றியில்
சேலைகள் நிறம்தரத்
திரிதரு யுவதிகள்
வாலைகள் குமரிகள்
வருவதைத் தேடினேன்.
இருபது வயதினில்
இல்லறம் தேடி
வருபவள் துணையுடன்
வாடகை வீட்டில்
வாழ்க்கையைத் தேடி
மக்களைப் பெற்று
வீழ்ச்சிகள் பெருமிதம்
வேகம் தாமதம்
புகழ்கள் பழிகள்
கடன்கள் லாபம்
இகழ்ச்சிகள் ஏற்றம்
எல்லாம் தேடினேன்.
மக்கள் வாழ்ந்திட
மணவினை முடித்து
அக்கமும் பக்கமும்
அழைத்து நடத்திப்